பல்லவி
1தா3ரினி தெலுஸுகொண்டி த்ரிபுர
ஸுந்த3ரி நின்னே ஸ1ரணண்டி
அனுபல்லவி
மாருனி ஜனகுடை3ன மா த3ஸ1ரத2
குமாருனி ஸோத3ரி த3யா-பரி மோக்ஷ (தா3)
சரணம்
சரணம் 1
அம்ப3 த்ரி-ஜக3தீ3ஸ்1வரி முக2 ஜித விது4
பி3ம்ப3 ஆதி3 புரமுன நெலகொன்ன
கனகாம்ப3ரி நம்மின வாரிகபீ4ஷ்ட
வரம்பு3லொஸகு3 தீ3ன லோக ரக்ஷகி
அம்பு3ஜ ப4வ புருஹூத ஸநந்த3ன
2தும்பு3ரு நாரது3லந்த3ரு நீது3
பத3ம்பு3னு கோரி ஸதா3
நித்யானந்தா3ம்பு3தி4லோனோலலாடு3சுண்டே3 (தா3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தா3ரினி/ தெலுஸுகொண்டி/ த்ரிபுர/
நெறியினை/ அறிந்துகொண்டேன்/ திரிபுர/
ஸுந்த3ரி/ நின்னே/ ஸ1ரணு/-அண்டி/
சுந்தரி/ உன்னையே/ சரண்/ அடைந்தேன்/
அனுபல்லவி
மாருனி/ ஜனகுடை3ன/ மா/ த3ஸ1ரத2/
மாரனை/ ஈன்ற/ எமது/ தசரத/
குமாருனி/ ஸோத3ரி/ த3யா-பரி/ மோக்ஷ/ (தா3)
குமாரனின்/ சோதரியே/ மிக்கு இரக்கமுடையவளே/ முத்தி/ நெறியினை...
சரணம்
சரணம் 1
அம்ப3/ த்ரி-ஜக3த்/-ஈஸ்1வரி/ முக2/ ஜித/ விது4/
அம்மா/ மூவுலகினுக்கும்/ தலைவியே/ முகம்/ வெல்லும்/ மதி/
பி3ம்ப3/ ஆதி3/ புரமுன/ நெலகொன்ன/
பிம்பத்தினை/ ஆதி/ புரத்தினில்/ நிலைபெற்ற/
கனக/-அம்ப3ரி/ நம்மின வாரிகி/-அபீ4ஷ்ட/
பொன்/ ஆடை அணிபவளே/ நம்பினோருக்கு/ விரும்பிய/
வரம்பு3லு/-ஒஸகு3/ தீ3ன லோக/ ரக்ஷகி/
வரங்கள்/ அளிக்கும்/ எளியோரை/ காப்பவளே/
அம்பு3ஜ ப4வ/ புருஹூத/ ஸநந்த3ன/
மலரோன்/ இந்திரன்/ சனந்தனர்/
தும்பு3ரு/ நாரது3லு/-அந்த3ரு/ நீது3/
தும்புரு/ நாரதர் ஆகியோர்/ யாவரும்/ உனது/
பத3ம்பு3னு/ கோரி/ ஸதா3/ நித்ய/-ஆனந்த3-/
திருவடியினை/ கோரி/ எவ்வமயமும்/ அழிவற்ற/ ஆனந்த/
அம்பு3தி4லோன/-ஓலலாடு3சு/-உண்டே3/ (தா3)
கடலினில்/ களித்து/ இருக்கும்/ நெறியினை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தா3ரினி - த3ரினி : அனுபல்லவியினையும், அனைத்து சரணங்களையும் பல்லவியுடன் இணைக்கையில், இச்சொல்லுக்கு 'நெறி்' அல்லது 'பாதை' என்று பொருள் படும். 'த3ரி' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை. எனவே, சங்கதி பாடுவதற்காக, 'தா3ரினி' என்ற சொல்லினை 'த3ரினி' என்று மாற்றப்பட்டுள்ளது என்று கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
2 - தும்பு3ரு - கந்தருவரின் மன்னன் - வானோரின் பாணன்.
3 - ஐஸ்1வர்ய - அட்ட ஐசுவரியம் - எண்வகைச் செல்வம் - அடிமை, இராசாங்கம், சுற்றம், நெல், பொன், மக்கள், மணி, வாகனம் ஆகியவை. அணிமா முதலான எண் சித்திகளையும் ஐசுவரியங்களாகக் கருதப்படும்.
5 - த்யாக3ராஜ - இவ்விடத்தில் திருவொற்றியூர் சிவனைக் குறிக்கும்.
Top
விளக்கம்
இப்பாடல், சென்னையை அடுத்த, திருவொற்றியூர், தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் எனப்படும், 'திரிபுர சுந்தரி'யினைக் குறித்து பாடப்பெற்றது.
4 - த3னுஜ ராஜ கு3ருனி வாஸர - 'வெள்ளி' எனப்படும் 'சுக்கிரன்', அரக்கரின் அரச குரு ஆவார். எனவே, 'வெள்ளிக் கிழமை' என்பதற்கு, தியாகராஜர், 'த3னுஜ ராஜ கு3ருனி வாஸர' - அரக்கரின் அரச குருவின் கிழமை - என்று கூறுகின்றார்.
Top
தசரத குமாரன் - இராமன்
ஆதி புரம் - சென்னையை யடுத்த திருவொற்றியூர்
அடவி - காடு
பனிமலை - இமயமலை
இயற்கை - ஐம்பூதங்கள் - பரம்பொருளின் வெளிப்படைத் தோற்றம்
பிறையணிவோன் - சிவன்
தியாகராசன் - திருவொற்றியூர் இறைவனின் பெயர்
Top